சங்கீதம்44tam_tcv
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.
1இறைவனே, வெகுகாலத்திற்குமுன்எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றைஅவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்;அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.2நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி,எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்;நீர் அந்நாட்டினரை தண்டித்து,எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.3அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை,அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை;நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும்உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.4இறைவனே, நீரே என் அரசன்;யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.5உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி,உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.6என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை,என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;7ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து,எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.8நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்;நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.9இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்;நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.10எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்;எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.11செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்;நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.12நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்;அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.13எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்;எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.14நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்;மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.15நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்;என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.16என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும்பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.17நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்;உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்;ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.18எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை,எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.19ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்;காரிருளினால் எங்களை மூடினீர்.20எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால்,அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,21இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ?அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.22ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்;அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.23யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்?விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.24நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?25நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்;எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.26நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்;உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.