எரேமியா3tam_tcv
1“ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தபின்பு,அவள் அவனைவிட்டு, போய் வேறொரு மனிதனைத் திருமணம் செய்தால்,முந்திய கணவன் அவளிடம் திரும்பிப் போகலாமோ?அவ்விதம் செய்தால் நாடு முழுவதும் கறைப்படுத்தப்பட்டுப் போகாதோ?நீயோ பல காதலர்களுடன் வேசியாக வாழ்ந்திருக்கிறாய்.இப்பொழுது என்னிடம் திரும்புவாயா?”என்று யெகோவா அறிவிக்கிறார்.2“நீ மேலே நோக்கி வறண்ட மேடுகளைப் பார்.நீ வேசித்தனம் செய்யாத இடமேதும் உண்டோ?பாலைவனத்தின் நாடோடியைப்போல்,காதலருக்காக தெருவோரங்களில் காத்துக்கொண்டிருந்தாய்.உன்னுடைய வேசித்தனத்தினாலும்,கொடுமையினாலும் நாட்டைக் கறைப்படுத்தினாய்.3இதனால் மழை வீழ்ச்சி தடைசெய்யப்பட்டு,கோடை மழையும் பெய்யவில்லை.அப்படியிருந்தும் நீ ஒரு வேசியின் நாணமற்ற தோற்றத்தை உடையவளாய் இருக்கிறாய்;நீ வெட்கங்கொண்டு நாணமடைய மறுக்கிறாய்.4இப்பொழுதும் நீ என்னைக் கூப்பிட்டு,‘என் பிதாவே, என் வாலிப காலத்திலிருந்து என் நண்பராயிருப்பவரே,5நீர் எப்போதும் கோபமாயிருப்பீரோ?உமது பெருங்கோபம் என்றைக்கும் நீடித்திருக்குமோ?’ என்று கேட்கவில்லையா?நீ பேசுவது இப்படித்தான்,ஆனால் நீ உன்னால் முடிந்த தீமையையெல்லாம் செய்கிறாய்.”