ஏசாயா57tam_tcv
1நீதியானவர்கள் அழிகின்றார்கள்,இதைப்பற்றி ஒருவருமே தங்கள் இருதயத்தில் சிந்திப்பதில்லை;பக்தியுள்ளவர்களும் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்;தீமையிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியாகவே,நீதியுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்என்பதை ஒருவரும் விளங்கிக்கொள்வதில்லை.2நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து,தங்கள் மரணத்தில் படுத்திருக்கும்போது,இளைப்பாறுதல் பெறுகிறார்கள்.3“ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே,விபசாரிகளுக்கும் வேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளே, நீங்கள் இங்கே வாருங்கள்.4யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்?யாரைப் பழிக்க உங்கள் வாயைத்உங்கள் நாவை நீட்டுகிறீர்கள்?நீங்கள் கலகக்காரரின் பிள்ளைகள் அல்லவா?பொய்யரின் சந்ததியல்லவா?5நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும்,ஒவ்வொரு படர்ந்த மரத்தினடியிலும் காமவெறி கொள்கிறீர்கள்;பாறைகளின் வெடிப்புகளிலும், தொங்கும் பாறைகளின் கீழும்உங்கள் பிள்ளைகளைப் பலியிடுகிறீர்கள்.6வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும்விக்கிரங்களே உங்கள் பங்கு;அவை, அவைதான் உங்கள் பாகம்.ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து,தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள்.இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ?7நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்;பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய்.8உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால்நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய்.என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய்,அதிலேறி அதை அகலமாக்கினாய்;நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய்,நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.9நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்;நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய்.நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்;அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்!10உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள்,ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை.நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால்சோர்ந்துபோகவில்லை.11“நீ யாருக்குப் பயந்து, நடுங்கிஎனக்குப் பொய்யாய் நடந்தாய்?என்னை நினையாமலும்இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்?நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோநீ எனக்குப் பயப்படாது போனாய்?12நான் உனது நீதியையும் உனது வேலைகளையும்உனது செயல்களையும் வெளிப்படுத்துவேன்;அவை உனக்கு உதவாது.13நீ உதவிகேட்டு அழுகிறபோது,நீ சேகரித்த விக்கிரகங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்!காற்று அவைகளை அள்ளிக்கொண்டு போகுமே!வெறும் மூச்சே அவைகளை அடித்துக்கொண்டும்.ஆனால் என்னை நம்பியிருக்கிறவர்களோ,நாட்டைத் தன் சொத்துரிமையாக்கி,எனது பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”